Wednesday, January 28, 2009

சமர்ப்பணம் : பிரணாப் முகர்ஜி க்கு!

ஈழத்தமிழனின் இடர் தொடர்கிறது. நாதியற்று நிக்கிறான் நடுத்தெருவில். காசா கண்ணுக்கு தெரிகிறது. ஆனால் எம் அவலம் மட்டும் எவருக்கும் தெரியவில்லை. தெரிந்தாலும் கண்மூடி மௌனிகளாக இருக்கின்றனர். காரணம், எமது தந்தை நாடு என நாம் ஆராதிக்கும் இந்தியாவின் அணுகுமுறை. இந்த அவலங்கள் பிரணாப் முகர்ஜிக்கோ அல்லது பிரதம மந்திரிக்கோ அல்லது சோனியா அம்மையாருக்கோ அல்லது கலைஞருக்கோ தெரியாதா (கலைஞருக்கு சத்தியமா தெரியாது , தெரிஞ்சால் இந்த அளவிற்கு மனிதர் எவ்வளவோ செய்திருப்பார்). அல்லது தெரிந்த்தும் எல்லோரும் கலைஞர் போல ஈழத்தமிழன் அழியட்டும் என காத்திருக்கிறார்களா? எல்லோருக்கும் காலம் பதில் சொல்லும். களத்தில் புலி வெல்லும் போது..!

Monday, January 26, 2009

ஷெல் மழை..! இரத்த வெள்ளம்..!! தொடரும் வன்னி அவலம்.!!!

இதை எல்லோருடனும் பகிர்ந்தூ கொள்ளுங்கள். எங்கள் உறவுகளின் சோகக் கதைகளை கேளுங்கள்.







Sunday, January 25, 2009

ஐயோ ஆண்டவா....! காப்பாத்து.....!!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=50953

தயவு செய்து இந்த சுட்டிக்கு விரையுங்கள். இதை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள். உங்களால் என்ன முடியுமோ அதை செய்யுங்கள். என்னால் இதற்கு மேல் எதுவும் எழுத முடியவில்லை. கண்ணீர் மட்டும் கசிகிறது. இந்த இன்னல்கள் இன்னும் எவரின் காதுக்குள்ளும் விழவில்லையா. அல்லது விழுந்தும் அழியட்டும் என அமைதியாக இருக்கிறார்களா?

சர்வதேசமே கண் திற............!

Monday, January 19, 2009

தொடரும் இடப்பெயர்வுகள்....!

உலக வரலாற்றில் எப்பவும் வன்னிமக்களுக்கே இருக்கப்போகும் ஒரு துன்பமான சாதனை என்ன தெரியுமா? அதிக தடவை இடம்பெயர்ந்த மக்கள் என்பதுதான். காலம் ஒடுகிறது. காலத்துடன் உலகம் தன்னை வளர்த்துக்கொள்ள ஓடுகிறது. ஆனால் ஈழத்தமிழ் மக்களோ தத்தம் உயிர்களை காப்பதற்காக காலம் பூராகவும் ஓட வேண்டி உள்ளது. என்று தணியும் இந்த சுதந்திர தாகம்.

இதுவும் கடந்து போகும். இந்த நிலையும் மாறலாம். என்றதன்மைக்கேற்ப எத்துணை இடர்கள் வந்தாலும், எத்துணை இழப்புகள் நேர்ந்தாலும் கணத்திற்கு கணம் அதிகரிக்கும் உறுதியும் விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்ற அந்த பேராவாவும், புலம்பெயர் தமிழர்களின் பாசமான ஆதரவும், தொப்புள் கொடி உறவுகளான தமிழக மக்களின் நெஞ்சார்ந்த நேசமும் உள்ளவரை தொடரும். வேட்கை தணியும் வரை வேங்கைகள் பணியாது.


"தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்"






Sunday, January 18, 2009

ஈழத்தில் தொடரும் அவலம்....!

வன்னி விசுவமடு பிரதேசம் மீது சிறிலங்கா அரசின் கோரப்படைகள் நடாத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் இன்று 9 பேர் கொல்லப்பட்டும் 33 பேர் படுகாயமும் அடைந்துள்ளனர். செய்திக்கு புதினம் இணையத்தளத்திற்கு......!






படங்கள் : நன்றி புதினம்