Monday, April 20, 2009

ஐயகோ...! அவலத்தின் உச்சம்....!!

ஈழத்தமிழ் மக்கள் மீதான ஒரு மிலேச்சத்தனமான இன அழிப்பின் ஒரு பெரும் அங்கம் நேற்று புது மாத்தளன் பகுதியில் நடந்தேறியுள்ளது. இந்த அழிப்பின் சாட்சிகளாக இங்கே ஒளிப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதனை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள். எங்கள் மக்கள் அங்கே கொலைவெறி இராணுவத்தால் கொல்லப்படுகின்றனரா? அல்லது விடுவிக்கப்படுகின்றனரா?

இப்படி கண்மூடித்தனமாக தாக்குதல் நடாத்தி ஒரு இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையை மேற்கொள்கிறான் என்பது மட்டும் தெளிவு.

இதோ அந்த சுட்டி...!

சர்வதேசமே உனக்கு கண் இல்லையா? நடப்பது நடக்கட்டும். மிஞ்சுவது மிஞ்சட்டும். என்று என்ன அசட்டையாகவா உள்ளாய்? ஒரு இனத்தின் அவலத்திற்கு இதைவிட உலகில் எங்காவது சாட்சியம் உண்டா? வேரோடு அழிக்கிறான். கூண்டோடு சாய்க்கிறான். இதில் இருக்கும் படங்களை பார்த்த பின்னும் அந்த ஈழமக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை என்றால் நீங்கள் மரத்திற்கு ஒப்பானவர்கள்......!சர்வதேசமே நீ மரத்திற்கு ஒப்பாணவன்...!



தயவு செய்து இந்த வலைப்பதிவினை அனைத்து திரட்டிகளின் முதற்பக்கத்திலே வைத்திருந்து எல்லோரும் பார்த்து இந்த வேதனையை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள நீங்கள் ஆவன செய்யவேண்டும்.

Thursday, April 16, 2009

இனி அழுவதற்கு கண்ணீர் இல்லை.....!