Monday, April 20, 2009

ஐயகோ...! அவலத்தின் உச்சம்....!!

ஈழத்தமிழ் மக்கள் மீதான ஒரு மிலேச்சத்தனமான இன அழிப்பின் ஒரு பெரும் அங்கம் நேற்று புது மாத்தளன் பகுதியில் நடந்தேறியுள்ளது. இந்த அழிப்பின் சாட்சிகளாக இங்கே ஒளிப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதனை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள். எங்கள் மக்கள் அங்கே கொலைவெறி இராணுவத்தால் கொல்லப்படுகின்றனரா? அல்லது விடுவிக்கப்படுகின்றனரா?

இப்படி கண்மூடித்தனமாக தாக்குதல் நடாத்தி ஒரு இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையை மேற்கொள்கிறான் என்பது மட்டும் தெளிவு.

இதோ அந்த சுட்டி...!

சர்வதேசமே உனக்கு கண் இல்லையா? நடப்பது நடக்கட்டும். மிஞ்சுவது மிஞ்சட்டும். என்று என்ன அசட்டையாகவா உள்ளாய்? ஒரு இனத்தின் அவலத்திற்கு இதைவிட உலகில் எங்காவது சாட்சியம் உண்டா? வேரோடு அழிக்கிறான். கூண்டோடு சாய்க்கிறான். இதில் இருக்கும் படங்களை பார்த்த பின்னும் அந்த ஈழமக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை என்றால் நீங்கள் மரத்திற்கு ஒப்பானவர்கள்......!சர்வதேசமே நீ மரத்திற்கு ஒப்பாணவன்...!



தயவு செய்து இந்த வலைப்பதிவினை அனைத்து திரட்டிகளின் முதற்பக்கத்திலே வைத்திருந்து எல்லோரும் பார்த்து இந்த வேதனையை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள நீங்கள் ஆவன செய்யவேண்டும்.

Thursday, April 16, 2009

இனி அழுவதற்கு கண்ணீர் இல்லை.....!

Monday, March 2, 2009

வன்னி அவலம்...........!

தயவு செய்து இதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். குறிப்பாக பிறமொழி மக்களுடன்.

தொடர்கிறது எமது மக்களின் அவலம். யாரும் கண்திறந்து பார்க்காத நிலை. இரக்கமே இல்லாமல் இறுகிப்போன உலக சமூகத்தின் முன் இப்படி இறைஞ்சிக் கேட்டால் கிடைக்குமா விடிவு...! கேள்விகளான எமது வாழ்வின் விடை என்ன? முகவரி இழந்து போவோமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்





Monday, February 2, 2009

எரிகுண்டுகளால் எரியும் வன்னி மக்கள்..!

இன்னும் அவலம் தீர்ந்த பாடில்லை. நேற்றையதினம் புத்துக்குடியிருப்பில் சிறிலங்கா அரசபடைகளின் எரிகுண்டு வீச்சால் காயமடைந்தும் கொல்லப்பட்ட மக்களின் புகைப்படங்கள். படங்கள் நன்றி: புதினம்







Wednesday, January 28, 2009

சமர்ப்பணம் : பிரணாப் முகர்ஜி க்கு!

ஈழத்தமிழனின் இடர் தொடர்கிறது. நாதியற்று நிக்கிறான் நடுத்தெருவில். காசா கண்ணுக்கு தெரிகிறது. ஆனால் எம் அவலம் மட்டும் எவருக்கும் தெரியவில்லை. தெரிந்தாலும் கண்மூடி மௌனிகளாக இருக்கின்றனர். காரணம், எமது தந்தை நாடு என நாம் ஆராதிக்கும் இந்தியாவின் அணுகுமுறை. இந்த அவலங்கள் பிரணாப் முகர்ஜிக்கோ அல்லது பிரதம மந்திரிக்கோ அல்லது சோனியா அம்மையாருக்கோ அல்லது கலைஞருக்கோ தெரியாதா (கலைஞருக்கு சத்தியமா தெரியாது , தெரிஞ்சால் இந்த அளவிற்கு மனிதர் எவ்வளவோ செய்திருப்பார்). அல்லது தெரிந்த்தும் எல்லோரும் கலைஞர் போல ஈழத்தமிழன் அழியட்டும் என காத்திருக்கிறார்களா? எல்லோருக்கும் காலம் பதில் சொல்லும். களத்தில் புலி வெல்லும் போது..!

Monday, January 26, 2009

ஷெல் மழை..! இரத்த வெள்ளம்..!! தொடரும் வன்னி அவலம்.!!!

இதை எல்லோருடனும் பகிர்ந்தூ கொள்ளுங்கள். எங்கள் உறவுகளின் சோகக் கதைகளை கேளுங்கள்.







Sunday, January 25, 2009

ஐயோ ஆண்டவா....! காப்பாத்து.....!!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=50953

தயவு செய்து இந்த சுட்டிக்கு விரையுங்கள். இதை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள். உங்களால் என்ன முடியுமோ அதை செய்யுங்கள். என்னால் இதற்கு மேல் எதுவும் எழுத முடியவில்லை. கண்ணீர் மட்டும் கசிகிறது. இந்த இன்னல்கள் இன்னும் எவரின் காதுக்குள்ளும் விழவில்லையா. அல்லது விழுந்தும் அழியட்டும் என அமைதியாக இருக்கிறார்களா?

சர்வதேசமே கண் திற............!