Monday, April 20, 2009

ஐயகோ...! அவலத்தின் உச்சம்....!!

ஈழத்தமிழ் மக்கள் மீதான ஒரு மிலேச்சத்தனமான இன அழிப்பின் ஒரு பெரும் அங்கம் நேற்று புது மாத்தளன் பகுதியில் நடந்தேறியுள்ளது. இந்த அழிப்பின் சாட்சிகளாக இங்கே ஒளிப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதனை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள். எங்கள் மக்கள் அங்கே கொலைவெறி இராணுவத்தால் கொல்லப்படுகின்றனரா? அல்லது விடுவிக்கப்படுகின்றனரா?

இப்படி கண்மூடித்தனமாக தாக்குதல் நடாத்தி ஒரு இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையை மேற்கொள்கிறான் என்பது மட்டும் தெளிவு.

இதோ அந்த சுட்டி...!

சர்வதேசமே உனக்கு கண் இல்லையா? நடப்பது நடக்கட்டும். மிஞ்சுவது மிஞ்சட்டும். என்று என்ன அசட்டையாகவா உள்ளாய்? ஒரு இனத்தின் அவலத்திற்கு இதைவிட உலகில் எங்காவது சாட்சியம் உண்டா? வேரோடு அழிக்கிறான். கூண்டோடு சாய்க்கிறான். இதில் இருக்கும் படங்களை பார்த்த பின்னும் அந்த ஈழமக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை என்றால் நீங்கள் மரத்திற்கு ஒப்பானவர்கள்......!சர்வதேசமே நீ மரத்திற்கு ஒப்பாணவன்...!



தயவு செய்து இந்த வலைப்பதிவினை அனைத்து திரட்டிகளின் முதற்பக்கத்திலே வைத்திருந்து எல்லோரும் பார்த்து இந்த வேதனையை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள நீங்கள் ஆவன செய்யவேண்டும்.

3 comments:

latchoumanan velavan said...

god only save my people otherwise nothing to say??????????????????

Anonymous said...

இந்த மக்களை விட்டுடுங்களேண்டா..

ஏண்டா அவங்களை விடாம கொல்லுறீங்க?

அவங்களுக்கு பின்னாடி ஒளிஞ்சிகிட்டு ஏண்டா அவங்களை கொல்றீங்க?

மனுசங்களாடா நீங்க?

தைரியமிருந்தா இவங்களை விட்டுட்டு நேருக்கு நேரா ராணுவத்தோட மோதுங்கடா..

இவங்களை விட்டுடுங்கடா..

Anonymous said...

தடுத்து வைக்கப்படவில்லை தோழா! வர விருப்பம் இல்லை. வந்த மக்கள் இருக்கும் முகாம்கள் வதை முகாம்களாக மாறிவிட்டன. அங்க்க் நடக்கும் சோகம் அறிவாயா தோழா? உனது சகோதரிகள் கற்பழிக்கப்படுகிறார்கள். உனது சகோதரர்கள், காணாமல் போகிறார்கள். இங்கு போய் சாவதை விட, எமது சொந்த மண்ணிலேயே சாவோம் என இருக்கிறார்கள் அவர்கள். அப்படி இருந்தும் மக்கள் வருகிறார்களே...! யாரும் தடுக்கவில்லை. எனவே தயவு செய்து நிலைமையை உணர்ந்து செயற்படுங்கள்.