Monday, January 19, 2009

தொடரும் இடப்பெயர்வுகள்....!

உலக வரலாற்றில் எப்பவும் வன்னிமக்களுக்கே இருக்கப்போகும் ஒரு துன்பமான சாதனை என்ன தெரியுமா? அதிக தடவை இடம்பெயர்ந்த மக்கள் என்பதுதான். காலம் ஒடுகிறது. காலத்துடன் உலகம் தன்னை வளர்த்துக்கொள்ள ஓடுகிறது. ஆனால் ஈழத்தமிழ் மக்களோ தத்தம் உயிர்களை காப்பதற்காக காலம் பூராகவும் ஓட வேண்டி உள்ளது. என்று தணியும் இந்த சுதந்திர தாகம்.

இதுவும் கடந்து போகும். இந்த நிலையும் மாறலாம். என்றதன்மைக்கேற்ப எத்துணை இடர்கள் வந்தாலும், எத்துணை இழப்புகள் நேர்ந்தாலும் கணத்திற்கு கணம் அதிகரிக்கும் உறுதியும் விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்ற அந்த பேராவாவும், புலம்பெயர் தமிழர்களின் பாசமான ஆதரவும், தொப்புள் கொடி உறவுகளான தமிழக மக்களின் நெஞ்சார்ந்த நேசமும் உள்ளவரை தொடரும். வேட்கை தணியும் வரை வேங்கைகள் பணியாது.


"தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்"






No comments: