ஈழத்தமிழனின் இடர் தொடர்கிறது. நாதியற்று நிக்கிறான் நடுத்தெருவில். காசா கண்ணுக்கு தெரிகிறது. ஆனால் எம் அவலம் மட்டும் எவருக்கும் தெரியவில்லை. தெரிந்தாலும் கண்மூடி மௌனிகளாக இருக்கின்றனர். காரணம், எமது தந்தை நாடு என நாம் ஆராதிக்கும் இந்தியாவின் அணுகுமுறை. இந்த அவலங்கள் பிரணாப் முகர்ஜிக்கோ அல்லது பிரதம மந்திரிக்கோ அல்லது சோனியா அம்மையாருக்கோ அல்லது கலைஞருக்கோ தெரியாதா (கலைஞருக்கு சத்தியமா தெரியாது , தெரிஞ்சால் இந்த அளவிற்கு மனிதர் எவ்வளவோ செய்திருப்பார்). அல்லது தெரிந்த்தும் எல்லோரும் கலைஞர் போல ஈழத்தமிழன் அழியட்டும் என காத்திருக்கிறார்களா? எல்லோருக்கும் காலம் பதில் சொல்லும். களத்தில் புலி வெல்லும் போது..!
Wednesday, January 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment